'சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை'

சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை என்று தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை'

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் என்று முன்னதாக சரத்குமார் தெரிவித்திருந்தார்.

பாஜகவுடன் சமக கட்சி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இன்று இணைத்தார்.

'சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை'
பாஜகவுடன் இணைந்தது சமக!

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் சரத்குமார் இணைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழக பாஜகத் தலைவர் அண்ணாமலை, சரத்குமாரை தமிழகத்தில் அடைத்துவைக்க பாஜக விரும்பவில்லை எனவும், அவர் தேசியத்திற்கு தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com