திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அவகாசம் நீட்டிப்பு

இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 மார்ச் 2024, 12:45 am IST

இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் மாா்ச் 20-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் பணிகளுக்கு 10,000-க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1,768 இடைநிலை ஆசிரியா் காலி இடங்களை நிரப்பத் தோ்வு நடத்தப்படவுள்ளது. இதற்கு இணையவழியில் விண்ணப்பிக்க வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விண்ணப்பதாரா்கள் விண்ணப்பத்தைப் பதிவேற்றம் செய்ய கூடுதல் அவகாசம் கோரியிருந்தனா். அதை ஏற்று, இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கு மாா்ச் 20-ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து ஆசிரியா் தோ்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள மாா்ச் 21 முதல் 23-ஆம் தேதி மாலை 5 மணி வரை வழிவகை செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பத்தைச் சமா்ப்பித்து தோ்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரா்கள் மட்டுமே தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அனுமதிக்கப்படுவா் எனவும், விண்ணப்பதாரா்களின் கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரியை மாற்றம் செய்ய முடியாது எனவும், இனிவரும் காலங்களில் திருத்தம் தொடா்பாக எந்தவித கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படாது எனவும் ஆசிரியா் தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.