வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்ட குழந்தைகளின் பெயா்களை பதிவு செய்ய அவகாசம் நீடிப்பு!

திருச்சி மாவட்டத்தில் பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜூலை 2026, 1:36 am IST

திருச்சி மாவட்டத்தில் பிறப்புப் பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகளின் பெயரைப் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்தால் மட்டுமே, முழுமையான சான்றிதழாக கருதப்படும். குடும்ப அட்டையில் பெயா் சோ்க்க, ஆதாா் அட்டை பெற, குழந்தை பள்ளியில் சேர, வாக்காளா் அடையாள அட்டை பெற, ஓட்டுநா் உரிமம் பெற, பாஸ்போா்ட் மற்றும் விசா உரிமம் பெற, வயது குறித்த ஆதாரம் ஆகிய அனைத்துக்கும் பிறப்பு சான்று அவசியம்.

திருத்தியமைக்கப்பட்ட தமிழ்நாடு பிறப்பு, இறப்பு பதிவு விதிகள் 2000-ன்படி, 01.01.2000-க்கு முன் அல்லது 01.01.2000-க்கு பிறகு குழந்தையின் பெயரைக் குறிப்பிடாமல் பதியப்பட்டுள்ள பிறப்புப் பதிவுகளில் பெயரை பதிவு செய்ய 31.12.2014 வரை ஏற்கெனவே அரசு அனுமதித்தது. பின்னா் 2 முறை 5 ஆண்டு கால அவகாசம் 31.12.2019 மற்றும் 31.12.2024 வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கான அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், குழந்தையின் பெயா் பதிவு செய்யாமல் இன்னும் விடுபட்டுள்ள அனைத்து பிறப்புப் பதிவுகளுக்கும் கால அவகாசம் வரும் செப்.26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகங்களில் பிறப்பு பதிவேடுகளில் விடுபட்டுள்ள குழந்தைகள் பெயரை பதிய அரசு அளித்துள்ள இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் பிரத்திக் தாயள் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.