சென்னையில் தி.நகரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகம் பாலன் இல்லத்தில் செய்தியாளர்கள் கூட்டம் இன்று(மார்ச். 18) மாலை 4 மணிக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் தேசிய செயலாளர் கே.நாராயணா, மாநிலச் செயலாளர் ரா.முத்தரசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் நாகப்பட்டினம், திருப்பூர் தொகுதி வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்படவுள்ளனர்.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும், திருப்பூரில் கே. சுப்பராயனும் இன்று மாலை நடைபெறும் செய்தியாளர் கூட்டத்தில் முறைப்படி அறிவிக்கப்படவுள்ளனர்.