பாஜக தலைமையிலான கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் சூழ்நிலையை பொறுத்து தான்ன் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஜான்பாண்டியன் ஏற்கெனவே கூறியிருந்தார். இதனால், ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.