ஈரோடு: ஈரோடு மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக கே.இ. பிரகாஷ்(வயது 48) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளரகவும், மேற்கு மண்டல பொறுப்பாளராகவும் இருந்து வருகிறார்.
மொடக்குறிச்சி அடுத்துள்ள காணியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இளங்கலை பொருளாதாரம் படித்துள்ள இவர் விவசாய குடும்ப பின்னணி கொண்டவர்.
தற்போது கெமிக்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி 1977-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிளைச் செயலாளராக உள்ளார். இதனால் சிறுவயதிலேயே பிரகாஷ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
பட்டதாரியான பிரகாஷின் மனைவி கோகிலா, திமுக ஒன்றிய கவுன்சிலராக இருந்துள்ளார். மகள் கன்யா, மகன் இனியன்.
இளைஞரணிக்கு தேர்தலில் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கே.இ. பிரகாஷ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.