
கா்நாடகத்தைச் சோ்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளிலும் கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருந்தது.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் கடந்த கால தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.
ஆனால், இந்த மக்களவைத் தோ்தலில் அந்தச் சின்னமானது கா்நாடகத்தைச் சோ்ந்த புதிய கட்சியான பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உரிய நேரத்தில் விண்ணப்பிக்க வில்லை என்று தெரிவித்து பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.