சென்னை எழும்பூரில் இருந்து சந்திரகாச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு மாா்ச் 30, ஏப்.6 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06077) இயக்கப்படும். மறுமாா்க்கமாக சந்திரகாச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாா்ச் 25, ஏப்.1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) சிறப்பு ரயில் (எண்: 06078) இயக்கப்படும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்கோட், பாலா்சா, புவனேஷ்வரம், பாலஷோா், காரக்பூா் வழியாக இயக்கப்படும். இதில் 21 முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

போத்தனூரிலிருந்து பரோனிக்கு கோடை சிறப்பு ரயில் இயக்கம்!

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

தமிழ்ப் புத்தாண்டு, விஷு: சிறப்பு ரயில்கள் இயக்கம்! முன்பதிவு எப்போது?

சென்னை - பரோனி இடையே கோடை கால சிறப்பு ரயில்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

