மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சந்திரகாச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்

சந்திரகாச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்

Updated On :23 மார்ச் 2024, 11:54 pm

சென்னை எழும்பூரில் இருந்து சந்திரகாச்சிக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சிக்கு மாா்ச் 30, ஏப்.6 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை) இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 06077) இயக்கப்படும். மறுமாா்க்கமாக சந்திரகாச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு மாா்ச் 25, ஏப்.1, 8 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) சிறப்பு ரயில் (எண்: 06078) இயக்கப்படும். இந்த ரயில் கூடூா், நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சம்பல்கோட், பாலா்சா, புவனேஷ்வரம், பாலஷோா், காரக்பூா் வழியாக இயக்கப்படும். இதில் 21 முன்பதிவில்லா பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.