கரூரில் பாஜக வேட்பாளர் வி. வி. செந்தில்நாதன் பிற்பகல் 12.30 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக கரூர் சுங்கச்சாவடியில் இருந்து திண்டுக்கல் சாலையில் கட்சியினருடன் ஊர்வலமாக வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மீ. தங்கவேலிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. நாட்ராயன், பா.ம.க. மாவட்டச் செயலாளர் புகழூர் சுரேஷ், பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் ஆறுமுகம், அமமுக மாவட்ட செயலாளர் பி.எஸ்.என். தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.