தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சனிக்கிழமை வெளியான நிலையில், மீதமுள்ள வேட்பாளர்களின் பெயர் இன்று மாலைக்குள் வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியும் ஒதுக்கப்பட்டது.
முதல்கட்டமாக கடந்த சனிக்கிழமை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் பெயர் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மீதமுள்ள திருநெல்வேலி, மயிலாடுதுறை மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பெயர் இன்று மாலைக்குள் அறிவிக்கப்படும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் கரூரில் ஜோதிமணி, விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.