தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி பேசியதாவது:
“விழுப்புரம் திமுகவின் கோட்டையாக உள்ளது. இங்குள்ள இரண்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார். தமிழகத்தில் 40 மட்டுமின்றி, இந்தியா முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் இந்தியா கூட்டணி உள்ளது. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்தவர் ஸ்டாலின் என்பதை யாரும் மறக்க மாட்டார்கள்.
கடந்த முறை ஒரு தொகுதியை விட்டுவிட்டோம். இந்த முறை அதனையும் சேர்த்து புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.
விழுப்புரம் தொகுதியை பொறுத்தவரை மற்ற தொகுதிகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகிறோம்.
அதிமுக என்ற கட்சி இருக்கிறதா என்பது சந்தேகமாக உள்ளது. திமுக தனி பலம் கொண்ட கட்சியாக தமிழகத்தில் உள்ளது. அதிமுக 6 அணிகளாக செயல்பட்டு வருகிறது. எங்களுக்கு போட்டியே இல்லை. திமுகவை எதிர்ப்பவர்கள் எல்லா இடங்களிலும் டெபாசிட்டை இழப்பார்கள்.” என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக - பாஜக கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது: தமிழிசை செளந்தரராஜன்

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை! - நடிகை கெளதமி
திமுக ஆட்சி அமைந்தால்தான் தமிழக உரிமைகள் பாதுகாக்கப்படும்! கனிமொழி பேச்சு

தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சியமைக்க திமுகவை அகற்ற வேண்டும்: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



