அரியலூர்: சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரும், அக்கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் வேட்பு மனுவை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், அரியலூர் ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், சட்டப்பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சங்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.