மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு


திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப்குமார் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.
மதிமுக பம்பரம் சின்னம் கோரியிருந்த நிலையில் தற்போது தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...