திமுகவுக்கு வாக்களிப்பது பாவத்தை செய்வதற்கு சமம் என பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை தெரிவித்தார்.
தஞ்சாவூரில் பிரசாரத்தின்போது போது பேசிய அவர், இந்தியா கூட்டணியில் ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை.
கர்நாடகத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தால் காவிரியில் நீர் வர வாய்ப்பில்லை என விமர்சித்தார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நீரைப் பெற்றுத்தருவோம் என நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுவதே திமுகவின் செயல் என குற்றம் சாட்டினார்.