தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

News image
Updated On :4 மே 2024, 1:48 pm

DIN

ஆம்பூர் அருகே சனிக்கிழமை மாலை சூறாவளி காற்றுடன் செய்த கன மழை காரணமாக வாழை மரங்கள் சேதமடைந்தன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலையிலேயே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அனல் காற்று வீசியது. 107.24 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியிருந்தது.

ஆனால் மாலை சுமார் 3.45 மணிக்கு திடீரென வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சூறாவளி காற்று வீசத் தொடங்கியது.

ஆம்பூர் நகரில் சில பகுதிகளில் சில நிமிடங்கள் லேசான தூரல் விழுந்தது. ஆனால் ஆம்பூரை சுற்றியுள்ள மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி, அரங்கல்துருகம் உள்ளிட்ட கிராமங்களில் சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது.

அரங்கல்துருகம் கிராமத்தில் சங்கர் என்ற விவசாயி நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சூறாவளி காற்றால் முறிந்து விழுந்தன. தென்னை மரம் ஒன்றும் முறிந்து விழுந்தது. சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.