நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

அவிநாசி அருகே ஓட்டுநர் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்குவதை அறிந்த பயணிகள் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :7 மே 2024, 12:06 pm IST

அவிநாசி: அவிநாசி அருகே ஓட்டுநர் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்குவதை அறிந்த பயணிகள் பாதி வழியிலேயே பேருந்தை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

உதகையில் இருந்து பயணிகளுடன் அரசுப் பேருந்து அவிநாசி வழியாக துறையூர் நோக்கி திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. மேட்டுப்பாளையம் அடுத்து வரும் போது தாறுமாறாக பேருந்து சென்றுள்ளது.

இதையறிந்த பயணிகள் ஓட்டுநரை கவணித்த போது, அவர் மது போதையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவிநாசி கருவலூர் அருகே வரும் போது, பேருந்தைப் பயணிகள் பாதியிலேயே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த அவிநாசி காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

நீண்ட நேரத்துக்கு பிறகு மாற்று ஓட்டுநர் வரவழைக்கப்பட்டு பேருந்து இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் தங்களது இருப்பிடத்துக்கு செல்ல காலதாமதம் ஏற்பட்டாலும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியாதால் பயணிகள் மகிழ்ச்சிடைந்தனர்.

இதனால் கருவலூரில் பெரும் பரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்த விடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்து காவல் துறையினரிடம் கேட்டபோது, ஓட்டுநர் மது போதையில் இருப்பது பரிசோதனைகளில் தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து துறையினரிடம் தெரியப்படுத்தி, மாற்று ஓட்டுநர் ஏற்பாடு செய்து பாதுகாப்பாக பயணிகள் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.