ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூரில் ரயில் அபாய சங்கிலி இழுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை ரயிலில் அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

Updated On :10 மே 2024, 4:12 am

DIN

தஞ்சாவூர்: பிரதமர் மோடிக்கு எதிராக போட்டியிடுவதற்காக வாரணாசிக்கு ரயிலில் புறப்பட்டுச் சென்ற விவசாயிகளுக்கு இருக்கைகள் ஒதுக்கீடு செய்ய மறுக்கப்பட்டதால் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள விவசாயிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படுவதாகக் கூறி விவசாய சங்கங்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவரை எதிர்த்து 111 விவசாயிகள் போட்டியிட முடிவு செய்துள்ளனர். இதற்காக வாரணாசிக்கு செல்ல 111 விவசாயிகள் முன்பதிவு செய்தனர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிறுவனத் தலைவர் பி. அய்யாக்கண்ணு தலைமையில் 39 விவசாயிகள் திருச்சியில் இருந்து காசி தமிழ்ச் சங்கம் ரயிலில் வெள்ளிக்கிழமை காலை ஏறினர்.

Story image

ஆனால் திடீரென இருக்கைகள் இல்லை என்றும், காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகவும் ரயில்வே அலுவலர்கள் கூறினர். இதனால் அதிருப்தியடைந்த விவசாயிகள் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சுமார் 2 மணிநேரம் ரயில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இவர்களிடம் ரயில்வே அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லும் வழியில் விழுப்புரம், செங்கல்பட்டு போன்ற நிலையங்களில் கிடைக்கும் காலி இருக்கைகளை ஒதுக்கீடு செய்வதாக ரயில்வே அலுவலர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட்டு புறப்பட்டுச் சென்றனர்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் அய்யாக்கண்ணு தெரிவித்தது:

காவிரியிலும் தண்ணீர் விடவில்லை. காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இதையெல்லாம் கண்டித்து வாரணாசியில் பிரதமரை எதிர்த்து போட்டியிடுவதற்காக ரயிலில் 111 பேர் முன்பதிவு செய்தோம். இந்தப் பயணச் சீட்டுகள் வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை காத்திருப்பு பட்டியலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருக்கைகள் தர மறுக்கும் நிலையில் நின்று கொண்டே பயணிப்பது கடினம். கூடுதல் பெட்டியை இணைக்குமாறு கோரியும் செய்ய மறுக்கின்றனர். அதனால் இப்போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றார் அய்யாக்கண்ணு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.