துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

கோடை வெயில் தணிந்தது: தமிழகத்தில் பரவலாக மழை!

தமிழகத்தின் பல பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.

News image
Updated On :16 மே 2024, 6:29 am

DIN

கோடை வெயில் தணிந்த நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளில் கன முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்ற கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில், பல பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்னர் கோடை வெயில் சமாளிக்க முடியாமல் மக்கள் தவித்துவந்தனர்.

ஆனால் வருண பகவான் கைவிடவில்லை. அவரின் கருணையால் கோடை வெயில் மேலும் அதிகரிக்காமல் விடுதலையளித்துள்ளது. கடந்த நான்கு நாள்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனால் வெயில் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனிடையே, தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மே 18, 19 அஆகிய தேதிகளில் 200 மி.மீ. வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் அதையொட்டிய தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மழை பெய்துள்ளது.

இரவு நேரங்களில் இடைவிடாது சென்னை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைப்பொழிவு நிலவி வந்தது. இன்று காலையும் சிலு சிலுவென மழை பொழிந்து வருகிறது. மேலும் மே 19 வரை ஒருசில பகுதியில் கனமழை பெய்யக்கூடும்.

இதனிடையே, விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 8 செ.மீ மழையும், திருப்பூர் உடுமலைப்பேட்டையில் 6, கிளானிலை (புதுக்கோட்டை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை மே 31-ல் துவங்க வாய்ப்புள்ளது என் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.