புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்ற காவல்

News image
Updated On :17 மே 2024, 1:11 pm

DIN

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருநாள் போலீஸ் காவல் முடிந்து மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறையில் வேறு வார்டுக்கு மாற்ற வேண்டும் எனும் மனுவை கோவை சிறை கண்காணிப்பாளருக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.

தேனி அருகேயுள்ள பூதிபுரம் தனியாா் விடுதியில் தங்கியிருந்த யூடியூபா் சவுக்கு சங்கா் கஞ்சா வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதனிடையே, அவா் தனக்குப் பிணை வழங்கக் கோரி, மதுரை போதைப்பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை வருகிற 20- ஆம் தேதிக்கு மதுரை போதைப்பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.