![கோப்புப்படம்.](http://media.assettype.com/dinamani%2Fimport%2F2019%2F9%2F27%2Foriginal%2Fta26trial_ch0007_26chn_4_637051161552046652.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சியில் இருந்து இன்றிரவு 11 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நாளை(திங்கள்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
முன்பதிவில்லாத இந்த ரயில் இடையில் திருவெறும்பூர், பூதலூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுக சந்திப்பு, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சி - தாம்பரம் இடையே இந்த மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 24ஆம் தேதி சென்னை எழும்பூர்-திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு சிறப்பு எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.