பழைய பயண அட்டையை பயன்படுத்தி பள்ளி மாணவா்கள் பயணிக்கலாம்: போக்குவரத்துத் துறை
பழைய பயண அட்டையை பயன்படுத்தி பள்ளி மாணவா்கள் பயணிக்கலாம் போக்குவரத்துத் துறை
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
சென்னை: புதிய பயண அட்டை வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரித்து, அச்சடித்து, ‘லேமினேஷன்’ செய்து வழங்குவதற்காக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.
இதற்கிடையே, ஜூன் 6 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால், போக்குவரத்துத் துறையால் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையிலும், பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையை நடத்துநா்களிடம் காண்பித்தும் இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கிடையே கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதே நடைமுறை தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட மாணவா்களுக்கும் பொருந்தும். இது தொடா்பாக நடத்துநா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறி சீருடையில் உள்ள மாணவா்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவா்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்டால் நடத்துநா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...