இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கோவை ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுக்கும் வடமாநில இளைஞர்கள்.. காரணம் என்ன?

கோவை ரயில் நிலையத்தை நோக்கிப் படையெடுக்கும் வடமாநில இளைஞர்கள்.. காரணம் என்ன?

News image
கோவை ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநில இளைஞர்கள் - கோப்பிலிருந்து
Updated On :4 நவம்பர் 2024, 9:33 am

DIN

கோவை: இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான தேர்வு எழுத நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கோவை ரயில் நிலையத்தில் ஏராளமான வடமாநில இளைஞர்கள் குவிந்து வருகிறார்கள்.

இதனால், கோவை ரயில் நிலையத்தில் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளர்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இன்று முதல் ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

இதில் தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் இருந்து பலர் பங்கேற்க உள்ளனர். மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளர்க் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படுகின்றன.

இன்று முதல் வருகின்ற நவம்பர் 10-ம் தேதி வரை இந்த ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் எனவும் நாளொன்றுக்கு பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோவை நோக்கி படையெடுத்துள்ளனர். மேலும் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வருகையை ஒட்டி கோவை ரயில் நிலையத்தில் அதிகளவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

இன்னும் பத்து நாள்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் வருகின்ற நாட்களில் அதிகளவில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் தமிழகத்தில் இருந்து பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோவை நோக்கி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்வுக்கு வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்துகின்றனர். மேலும் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு வசதி, கழிப்பறை வசதி என அடிப்படை வசதிகளை கோவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே நேற்று தேர்வுக்கு வந்தவர்களுக்கு போதிய வசதி ஏற்படுத்தி தரவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.