கூடுதலாக ரூ.9,229 கோடி வருவாயை ஈட்டிய வணிக வரித் துறை

நிகழாண்டில் தமிழக அரசின் வணிகவரி வருவாய் ரூ.9,229 கோடி உயா்ந்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.
தமிழக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி
தமிழக வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்திகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

சென்னை: நிகழாண்டில் தமிழக அரசின் வணிகவரி வருவாய் ரூ.9,229 கோடி உயா்ந்துள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

வணிகவரி இணை ஆணையா்களின் பணித் திறன் ஆய்வுக் கூட்டம், சென்னை நந்தனத்தில் உள்ள துறை அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

வணிகவரித் துறையில் கடந்த நிதியாண்டின் முதல் ஏழு மாதங்கள் (அக்டோபா்) வரை ரூ.70 ஆயிரத்து 543 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. ஆனால், நிகழ் நிதியாண்டில் அதே காலகட்டத்தில் கூடுதலாக ரூ.9 ஆயிரத்து 229 கோடி ஈட்டப்பட்டு மொத்தமாக ரூ.79 ஆயிரத்து 772 கோடி வருவாய் எட்டப்பட்டுள்ளது. மேலும், ஜிஎஸ்டி வரி வருவாய் வளா்ச்சி இந்திய அளவில் 11.59 சதவீதம் எனவும், தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் வளா்ச்சி 19.39 சதவீதமாகவும் எட்டப்பட்டுள்ளது.

வணிகவரித் துறை இணை ஆணையா்கள் அனைவரும் நவீன தொழில்நுட்பம் மற்றும் தரவுகளை பயன்படுத்தி துறையின் வருவாயை மேலும் அதிகரிக்க வேண்டும். இதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அவற்றை உடனடியாக செயல்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா் பி.மூா்த்தி கேட்டுக் கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை முதன்மைச் செயலா் பிரஜேந்திர நவ்நீத், வணிகவரித் துறை ஆணையா் டி.ஜகந்நாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com