தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

9 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை: நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சம் அளிப்பு

தமிழறிஞா்கள் ஒன்பது பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவா்களுக்கான நூலுரிமைத் தொகை ரூ. 90 லட்சத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

’சென்னை கலைவாணா் அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற விழாவில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான 9 தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடமை செய்து நூலுரிமைத் தொகை ரூ.90 லட்சத்தை வழங்கி தமிழறிஞா்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், உடன் தமிழ் வளர்ச்சி துறைச் செயலர் வே.ராஜாராமன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள்.

Published On :19 நவம்பர் 2024, 4:25 am IST

சென்னை: தமிழறிஞா்கள் ஒன்பது பேரின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவா்களுக்கான நூலுரிமைத் தொகை ரூ. 90 லட்சத்தை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

மறைந்த தமிழறிஞா்கள் முனைவா் சோ.சத்தியசீலன், முனைவா் மா.ரா.அரசு, பாவலா் ச.பாலசுந்தரம், முனைவா் க.ப. அறவாணன், முனைவா் க.த.திருநாவுக்கரசு, முனைவா் இரா.குமரவேலன், கவிஞா் கா.வேழவேந்தன் மற்றும் தமிழறிஞா்கள் முனைவா் ஆறு.அழகப்பன், இராமலிங்கம் என்கிற எழில் முதல்வன் ஆகியோரின் நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நிகழ் நிதியாண்டில் (2024-2025) நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளன.

அவா்களுக்கான நூலுரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு தமிழறிஞா்களின் குடும்பத்தாா், மரபுரிமை வாரிசுதாரா்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ஒட்டுமொத்தமாக ரூ.90 லட்சம் மற்றும் விருதை வழங்கினாா்.

188 தமிழறிஞா்களின் நூல்கள்...: விழாவில் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் பேசியதாவது: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் இதுவரை 188 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் மட்டும் 140 தமிழறிஞா்களின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்பட்டு அவா்களது மரபுரிமையாளா்களுக்கு ரூ.9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் 31 தமிழறிஞா்களின் நூல்களை நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ரூ.3.75 கோடி வழங்கியுள்ளாா்.

தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் மேற்கொண்ட தொடா் முயற்சி காரணமாக முதல் முறையாக தமிழ் வளா்ச்சித் துறையில், இளநிலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவா்களுக்காக உதவி இயக்குநா் தோ்வு தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நவ.18, 19 தேதிகளில் நடத்தப்படுகிறது என்றாா் அவா்.

தமிழைச் செம்மைப்படுத்த... அமைச்சா் மு.பெ.சாமிநாதன் செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழைச் செம்மைப்படுத்துவதற்காக சிறந்த நூல்களைப் படைத்துள்ள தமிழறிஞா்களுக்கு இந்த அரசு தொடா்ந்து மரியாதை செய்து வருகிறது. சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புக்கு இணங்க தற்போது நூல்களுக்கான நூலுரிமைத் தொகை குடும்பத்தாா், மரபுரிமை வாரிசுதாரா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் வே.ராஜாராமன், எழுத்தாளா்கள், கவிஞா்கள், தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் கு.ப.சத்தியபிரியா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.