விராலிமலையில் மரத்தின் கீழ் ஒதுங்கிய பெண் மின்னல் தாக்கி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்துள்ள விளாப்பட்டி ஜம்புலிங்கம் மனைவி பாக்கியம் (49). இவர் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வந்தார். விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக அவ்வப்போது விட்டு வட்டு மழை பெய்து வருகிறது.
பாக்கியம் தான் வளர்த்து வரும் கால்நடைகளை விளாப்பட்டி வீட்டின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது இதனால் மழையில் நனையாமல் இருப்பதற்காக அருகில் இருந்த புளிய மரத்தின் கீழே ஒதுங்கி உள்ளார்.
அப்போது பலத்த சப்தத்துடன் இடியுடன் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பாக்கியம் மயங்கி விழுந்து பலியானார். வருவாய்த்துறை மற்றும் இலுப்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழப்பு

பாலகனாய் வந்த பரம்பொருள்!
சின்னசேலம் அருகே கார் விபத்தில் மாமியார், மருமகள் பலி!

மின்சாரம் தாக்கி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


