தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பிக் பாஸ் 8: ஆண்கள் அணியில் சந்தோஷம் மட்டும்தான்! புகழ்ந்த அன்ஷிதா

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து ஆர்.ஜே. ஆனந்தியிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அன்ஷிதா.

News image

அன்ஷிதா

Updated On :19 நவம்பர் 2024, 0:47 pm IST

பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து ஆர்.ஜே. ஆனந்தியிடம் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை அன்ஷிதா. இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 6வது வாரத்தை எட்டியுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் ஆண்கள் அணியில் இருந்து ஒருவர் பெண்கள் அணிக்கும் பெண்கள் அணியில் இருந்து ஒருவர் ஆண்கள் அணிக்கும் மாறுவர்.

இதற்கான ஆலோசனை பிக் பாஸ் வீட்டில் நடைபெற்று வந்தது. இதில் ஆண்கள் அணிப்பக்கம் செல்ல ஆர்.ஜே. ஆனந்தி, தர்ஷிகா ஆகியோர் ஆர்வம் காட்டினர். இதற்கான காரணமாக, தான் ஆண்கள் அணியில் யாரிடமும் நெருக்கமாக இல்லை, அவர்கள் பக்கம் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளது என்பது போன்ற கருத்துகளைக் கூறினர்.

இந்நிலையில் கடந்த வாரம் ஆண்கள் அணிப்பக்கம் இருந்த அவர், ஆர்.ஜே. ஆனந்தியிடம் ஆண்கள் அணி குறித்து பேசியுள்ளார்.

''ஒரு உண்மையை சொல்லட்டுமா? ஆண்கள் அணிப்பக்கம் எந்தவொரு வெடியும் இல்லை. அவர்களும் சாதாரணமானவர்களே. ஏதாவது கவலை இருந்தால் அங்கு வந்து உட்கார்ந்துகொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அங்கு எனக்கு கவலையே ஏற்படவில்லை.

அங்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். தீபக் உடன் நான் அவ்வளவு பேசுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால், இது எல்லாமே நடந்தது.

அதேபோன்று அவர்கள் எனக்கும் என் கருத்துகளுக்கும் இடம் கொடுத்தனர். உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லலாம் என சுதந்திரம் கொடுத்தனர்'' எனக் கூறுகிறார்.

பெண்கள் அணியைச் சேர்ந்தவராக இருந்தாலும், ஆண்கள் அணிக்கு எதிரானவராக இருந்தாலும் ஆண்கள் அணியில் இருந்தது குறித்து மிகவும் நேர்மையான கருத்துகளை அன்ஷிதா முன்வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.