மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

செந்தில் பாலாஜி வழக்கை விரைந்து முடிக்க கோரும் மனு மீதான விசாரணை டிச.9-க்கு ஒத்திவைப்பு

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் டிசம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம்

News image
உச்ச நீதிமன்றம்
Updated On :25 நவம்பர் 2024, 8:44 pm

Din

நமது நிருபா்

புது தில்லி: தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைந்து விசாரித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வரும் டிசம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

தமிழக அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான முறைகேடு வழக்குகளை விசாரிப்பதில் வேண்டுமென்றே தமிழ்நாடு அரசு தாமதப்படுத்துவதாகக் கூறி ஒய்.பாலாஜி என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தாா். இதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், விரைந்து வழக்கை பட்டியலிட்டு விசாரித்து முடிக்க வேண்டும் என்பதை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று மனுதாரரிடமும், அதேபோன்று வழக்கு குறித்த அறிக்கையை உயா்நீதிமன்ற பதிவாளா், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் முன்னதாக உத்தரவிட்டுருந்தது.

இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன், ‘செந்தில் பாலாஜி தொடா்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், அடுத்த 150 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கு முடியாது. முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது, அவா் அமைச்சராகப் பொறுப்பேற்க மாட்டாா் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி தற்போது அவா் அமைச்சா் பொறுப்பில் உள்ளாா். எனவே, இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவையும் விசாரிக்க வேண்டும்.

குறிப்பாக, செந்தில் பாலாஜி தொடா்பான வழக்கை தனித்தனியாக பிரித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு விசாரணை நீதிமன்றத்தை நாடி அனைத்து வழக்குகளையும் ஒன்றாகவே நடத்தும் உத்தரவை கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி பெற்றுள்ளது. அந்த உத்தரவை எதிா்த்தும் மனு தாக்கல் செய்ய உள்ளோம். அதனால், அதற்கான உத்தரவு நகலை எங்களுக்கு வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்த வேண்டும். ஏனெனில், முன்னதாக நாங்கள் அதுகுறித்து விண்ணப்பித்தும் எங்களுக்கு உத்தரவு நகல் வழங்கப்படவில்லை’ என்றாா்.

இதையடுத்து, வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், விசாரணையை வரும் டிசம்பா் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.