இந்த நிலையில், மேற்குறிப்பிட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ். ஒகா மற்றும் அகஸ்டின் ஜாா்ஜ் மாசிஹ் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பாலாஜி சீனிவாசன், ‘செந்தில் பாலாஜி தொடா்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் விரைந்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், அடுத்த 150 ஆண்டுகள் ஆனாலும் இந்த வழக்கு முடியாது. முன்னதாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியபோது, அவா் அமைச்சராகப் பொறுப்பேற்க மாட்டாா் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அதனை மீறி தற்போது அவா் அமைச்சா் பொறுப்பில் உள்ளாா். எனவே, இதுதொடா்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுவையும் விசாரிக்க வேண்டும்.