கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

அமைச்சர் அன்பில் மகேஸ் மருத்துவமனையில் அனுமதி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

News image
அமைச்சர் அன்பில் மகேஸ் (கோப்புப்படம்)- DIN
Updated On :1 அக்டோபர் 2024, 5:40 pm

DIN

உடல் நலக் குறைவு காரணமாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் துறைசாா் பணிகளில் ஈடுபட்டு வந்த அவருக்கு செவ்வாய்க்கிழமை மாலை ஜீரண மண்டல பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் உடல் நிலை சீராக இருப்பதாகவும், விரைவில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பில் மகேஸ் பொய்யாமொழியை, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.