மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

சென்னை மெட்ரோ: ரூ.63,236 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

News image

மு.க. ஸ்டாலின் / நரேந்திர மோடி

Updated On :4 அக்டோபர் 2024, 12:14 am

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று (அக். 3) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூடத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியப் பொருளாதார மையம் சென்னை

மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதனைத் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், வேகமாக வளர்ந்துவரும் நகரமான சென்னை மிக முக்கியமான பொருளாதார மையமாகும் எனக் குறிப்பிட்டார்.

திட்ட நிதியளிப்பு முறை

சென்னை மெட்ரோ 2-ஆம் கட்டம் அனுமதிக்கப்பட்ட நிதி

மத்திய அரசு

(முதலீடு மற்றும் துணைக் கடன்) ரூ.7,425 கோடி

தமிழக அரசு

(முதலீடு மற்றும் துணைக் கடன்) ரூ.22,228 கோடி

இருதரப்பு மற்றும் பன்முக பிரதானக் கடன் ரூ.33,593 கோடி

மொத்தம் ரூ.63,246 கோடி

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்டத் திட்டத்துக்கு ரூ.63,236 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,

''கடந்த சந்திப்பில் நான் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் அளித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டு மக்களின் நெடுநாள் கோரிக்கை ஏற்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத்தைக் கூடிய விரைவில் நிறைவேற்றுவோம் என உறுதியாக நம்புகிறோம்'' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.