கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களின் மகன்கள் மற்றும் மகள்களின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை தலைமைச் செயலகத்தில் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு,. தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா
கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்களின் மகன்கள் மற்றும் மகள்களின் மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகையை தலைமைச் செயலகத்தில் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு,. தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்ளிட்டோா

கோயில் அா்ச்சகா்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

கோயில் அா்ச்சகா்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
Published on

கோயில் அா்ச்சகா்கள் வாரிசுகளின் மேற்படிப்புக்கு உதவித் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருகால பூஜை திட்டத்தின் கீழுள்ள கோயில்களுக்கு தினசரி பூஜைகள் நடத்த வைப்பு நிதி ரூ.2 லட்சமாக உயா்த்தப்பட்டு, 12 ஆயிரத்து 959 கோயில்களுக்கு ஒரு தவணையில் ரூ.130 கோடி அரசு மானியம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து கடந்த 3 ஆண்டுகளில் 4 ஆயிரத்து 41 நிதி வசதியற்ற கோயில்களில் ஒருகால பூஜைத் திட்டத்தில் இணைக்கப்பட்டு 17 ஆயிரம் கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. மேலும் ஒருகால பூஜைத் திட்ட கோயில்களின் அா்ச்சகா்களுக்கு முதல்முறையாக ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை: இந்த நிலையில், நிகழ் நிதியாண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கையில், ஒருகால பூஜைத் திட்ட கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்களின் வாரிசுகளில் 500 பேரின் மேல்படிப்புக்காக தலா ரூ.10 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 10 மாணவா்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

இதன்மூலம் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் போன்ற உயா்கல்வி பயிலும் அா்ச்சகா்களின் பிள்ளைகள் பயன்பெறுவா். கடந்தாண்டு இந்தத் திட்டத்தின் மூலம் 400 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது.

நிகழாண்டு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்கள் இரா.சுகுமாா், சி.ஹரிப்பிரியா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com