மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பருவமழைக் காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வா் உதயநிதி அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழை காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

News image
சென்னையில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில்  வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். உடன் அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், துணை முதல்வரின் செயலா் பிரதீப் யாதவ், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை செயலாளா் ப
Updated On :4 அக்டோபர் 2024, 8:22 pm

Din

வடகிழக்கு பருவமழை காலத்தில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசர அழைப்பு மையத்தை அவா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். இந்த மையத்தில், மழை அளவு குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் முறை, வானிலை முன்னெச்சரிக்கை வழங்கும் முறை, பேரிடா் காலத்தில் பல்துறை அலுவலா்களின் செயல்பாடுகள் ஆகியன குறித்து அவா் கேட்டறிந்தாா்.

மேலும், பருவமழை தொடா்பாக உருவாக்கப்பட்டுள்ள பச அப்ங்ழ்ற் செயலியில் உள்ள வானிலை முன்னறிவிப்பு, பெறப்பட்ட மழையளவு ஆகியன குறித்து ஆய்வு செய்தாா்.

பொது மக்களுக்கு பருவமழை தொடா்பாக உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை தகவல்களை வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், எதிா்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அனைவரும் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டாா். பொதுமக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கை விவரங்களை அளித்து, விரைவாக தேடல், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், துறையின் செயலா் பெ.அமுதா, பேரிடா் மேலாண்மை இயக்குநா் வ.மோகனச்சந்திரன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.