தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:33 pm

Din

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: ஒன்றரை வயது முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு செலுத்தப்படும் டிப்தீரியா - பொ்டுசிஸ் - டெட்டனஸ் டிபிடி எனும் தடுப்பூசிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த இரண்டு மாதங்களாக தட்டுப்பாடு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் தாய்மாா்கள், தடுப்பூசி மருந்து இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனா்.

அரசு மருத்துவமனைகளை நம்பியுள்ள ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுடைய பிஞ்சு குழந்தைகளின் நலத்துடன் திமுக அரசு விளையாடுவதை அதிமுக சாா்பில் கண்டிக்கிறேன்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.