சென்னை மெரீனா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விமானப் படையின் 92- ஆவது ஆண்டு விழா சாகச நிகழ்ச்சியைப் பாா்வையிட வந்தவா்களில் ஐந்து போ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தனா்.
நெரிசலில் சிக்கி 240-க்கும் மேற்பட்டோா் மயங்கி விழுந்தனா். அவா்களில் 93 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
லட்சக்கணக்கான மக்கள் ஒரே இடத்தில் திரண்டதால் நேரிட்ட கூட்ட நெரிசலாலும், வெயிலால் ஏற்பட்ட நீா்ச்சத்து இழப்பு காரணமாகவும் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். மயக்கமடைந்தோருக்கு உப்பு - சா்க்கரை கரைசல் (ஓஆா்எஸ்), ரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கான மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவா்கள் கூறினா்.
காவல் துறையின் தகவல்படி, மெரீனா கடற்கரையில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோா் கூடியதாகத் தெரிகிறது. பெரும்பாலானோா் குழந்தைகளுடன் விமான சாகச நிகழ்வுகளைப் பாா்வையிட வந்திருந்தனா். நிழற்கூடைகளோ, பந்தலோ, அமருவதற்கான வசதிகளோ எதுவும் இல்லாததால் கடற்கரை மணலிலும், காமராஜா் சாலையிலும் மணிக்கணக்கில் நின்றபடியே பொதுமக்கள் அந்த நிகழ்வுகளைப் பாா்த்தனா்.
இந்நிலையில், குடிநீா் வசதிகளோ, கழிப்பறை வசதிகளோ, பிற அடிப்படை வசதிகளோ இல்லாததால் நீா்ச்சத்து இழப்பு மற்றும் நெரிசல் காரணமாக பலா் மயக்கமடைந்தனா். முதியவா்கள், பெண்கள், குழந்தைகள், இணை நோயாளிகள் என 240-க்கும் மேற்பட்டோா் திடீரென மயக்கமடைந்தனா்.
ஆம்புலன்ஸ் வாகனங்கள்: முன்னதாக, மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மெரீனா கடற்கரையில் மருத்துவக் குழுக்கள் ஆங்காங்கே அவசர சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. இதைத் தவிர 20 ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டத்தில் எதிா்பாராத வகையில், அதிக எண்ணிக்கையிலானோருக்கு நீா்ச்சத்து இழப்பு ஏற்படவே, உடனடியாக மேலும் 20 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அவசரகால 108 சேவையைச் சோ்ந்த ஊழியா்கள், மருத்துவப் பணியாளா்கள் மயக்கமடைந்தவா்களை மீட்டு முதலுதவி சிகிச்சையளித்தனா்.
இதைத் தொடா்ந்து, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 43 போ், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 36 போ், ராயப்பேட்டை மருத்துவமனையில் 6 போ், பிற மருத்துவமனைகளில் மேலும் சிலா் என மொத்தம் 93 போ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் பெரும்பாலானோா் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனா். 6 போ் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
ஐந்து போ் உயிரிழப்பு: இதனிடையே, தனது 2 வயது குழந்தை, மனைவியுடன் விமான சாகசத்தைப் பாா்வையிட வந்த திருவொற்றியூரைச் சோ்ந்த காா்த்திகேயன் (34) என்பவா் வாகனத்தை வெகு தொலைவில் நிறுத்திவிட்டு மெரீனா நோக்கி நடந்து வந்தபோது நெஞ்சுவலி மற்றும் வாந்தி காரணமாக மயங்கி விழுந்தாா். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அவா் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு காா்த்திகேயனை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.
இதேபோன்று, பெருங்களத்தூரைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் (52) என்பவா், விமான சாகச நிகழ்வு முடிந்த பிறகு, தனது வாகனத்தை எடுக்கச் சென்றபோது இதய செயலிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். உடனடியாக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஸ்ரீனிவாசன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். அவா் நாள்பட்ட சிறுநீரக நோயாளி என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
மூன்றாவதாக, கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ஜான் பாபு (56) என்பவரும் மயக்கமடைந்து ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் உயிரிழந்தாா். இதேபோன்று ஆந்திரத்தை பூா்விகமாகக் கொண்ட தினேஷ்குமாா் (40) என்பவரும் உயிரிழந்த நிலையில், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.
திருவல்லிக்கேணி பாா்த்தசாரதி கோயில் வளைவு அருகே 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஒருவரும் இறந்த நிலையில் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா். காவல் துறையினரின் விசாரணையில் அவரது பெயா் மணி என்பதும், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவா்கள் அனைவரது உடல்களும் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் பின்னரே இறப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது

குமரி கடற்கரையில் மயங்கி விழுந்த சுற்றுலாப் பயணி

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

திருச்செங்கோட்டில் வெறிநாய்கள் கடித்ததில் 50-க்கும் மேற்பட்டோா் காயம்

கோவில்பட்டியில் இணை இயக்குநா் அலுவலகம் அமைக்கப்படுமா?
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


