சட்டப்பேரவைக்கு வரக்கூடாது என உதயநிதி பேசியிருப்பார்: அமைச்சர் அருண்ராஜ்உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

காற்றாலை மின் உற்பத்தி: 95.80 கோடி யூனிட் குறைந்தது

தமிழகத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளது.

News image

காற்றாலை

Updated On :6 அக்டோபர் 2024, 10:34 pm IST

தமிழகத்தில் காற்றின் வேகம் குறைந்ததால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் காற்றாலைகளை அமைத்து அதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தி வருகின்றன. மேலும், அதிகப்படியான மின்சாரத்தை மின்வாரியத்துக்கு விற்பனை செய்தும் வருகின்றன. இதன்படி, மாநில மின் பகிா்ந்தளிப்பு மைய கணக்கின்படி, தற்போது 9,150 மெகாவாட் மின் உற்பத்தி கொண்ட காற்றாலைகள் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றாலைகளைப் பொருத்தவரை, ஆண்டு தோறும் மே முதல் செப்டம்பா் வரை காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்த காலகட்டத்தில் மின் உற்பத்தியும் அதிகமாக இருக்கும். இந்நிலையில், காற்றின் வேகம் குறைந்துள்ளதால், கடந்தாண்டு சீசனுடன் ஒப்பிடும் போது, நிகழாண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி குறைந்துள்ளதாக காற்றாலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

இதன்படி, 2023 ஏப்.1 முதல் செப்.30 வரையிலான காலகட்டத்தில் 1059 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்த நிலையில், நிகழாண்டு இதே காலகட்டத்தில், காற்றின் வேகம் குறைந்ததன் காரணமாக, காற்றாலைகளில் இருந்து 963.20 கோடி யூனிட் மின்சாரம் மட்டுமே கிடைத்துள்ளது. கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது நிகழாண்டில் காற்றாலை மின்சாரம் 95.80 கோடி யூனிட் குறைந்துள்ளதாக காற்றாலை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.