பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! டாஸ்மாக் முறைகேடு! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மெரினா சாகச நிகழ்ச்சியில் மட்டுமா? விமானப் படை அணிவகுப்பிலும் அதே நிலைதான்!

மெரினா சாகச நிகழ்ச்சியில் மட்டுமல்ல, விமானப் படை அணிவகுப்பிலும் அதே நிலைதான்!

News image

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி

Updated On :8 அக்டோபர் 2024, 1:09 pm IST

தாம்பரம்: சென்னை மெரினா கடற்கரையில், விமானப் படையின் சாகச நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாம்பரத்தில் இன்று நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வின்போது 3 வீரர்கள் மயங்கி விழுந்தனர்.

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டுவிழவை முன்னிட்டு தாம்பரத்தில் உள்ள விமானப் படை நிலையத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் 100க்கும் மேற்பட்ட வீரர்களின் அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த விமானப் படை வீரர்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்ததையும், அவர்கள் ஸ்ட்ரெச்சரில் வைத்து தூக்கிச் செல்லப்படும் காட்சிகளும் ஏஎன்ஐ வெளியிட்ட விடியோவில் பதிவாகியிருக்கிறது.

மேலும், தாம்பரத்தில் நடந்த விமானப் படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்வின்போது 3 வீரர்கள் மயங்கி விழுந்தனர் என்று தகவல்களும் தெரிவிக்கின்றன. மயங்கி விழுந்த வீரர்களுக்கு உடனே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் நடத்தப்பட்ட இந்திய விமானப் படையின் விமான சாகசத்தைக் காண வந்த 200க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். இவர்களில் 5 பேர் அதிகப்படியான வெயில் காரணமாக வெப்ப வாதம் மற்றும் நீர்ச்சத்துக் குறைந்ததால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளால் உயிரிழந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகப்படியான வெப்பம் வாட்டியதே இதற்குக் காரணமாகவும் கூறப்பட்டது. மேலும், 93 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர் என்றும் தற்போது மருத்துவமனைகளில் 7 பேர் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது தமிழகம் முழுவதும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது. எதிர்க்கட்சிகள் முதல் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வரை அனைவரும் இந்த சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

எதிர்பார்த்ததைவிடவும் அதிகப்படியான மக்கள் கூடியதே இதற்குக் காரணம் என்று கூறப்பட்டாலும், வந்த மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை செய்ய அரசு தவறிவிட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், விமானப் படை வீரர்களும், அணிவகுப்பின்போது மயங்கி விழுந்திருப்பது செய்தியாகியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.