கனமழை எச்சரிக்கை: பாரம்பரிய மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு

கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்.17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கனமழை எச்சரிக்கை: பாரம்பரிய மருத்துவக் கலந்தாய்வு ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அக்.17-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சித்தா, ஆயுா்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின்கீழ் அரும்பாக்கம் அறிஞா் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவக் கல்லூரி, யுனானி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் கோட்டாறு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரி ஆகியவை உள்ளன. இந்த 5 அரசு கல்லூரிகளில் 330 இடங்களும், 30 தனியாா் கல்லூரிகளில் 1,980 இடங்களும் உள்ளன.

அந்த வகையில், சித்தா (பிஎஸ்எம்எஸ்), ஆயுா்வேதம் (பிஏஎம்எஸ்), யுனானி (பியுஎம்எஸ்), ஹோமியோபதி (பிஹெச்எம்எஸ்) ஆகிய பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் விண்ணப்பித்தனா்.

அவை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான மாணவா்களுக்கான தரவரிசை பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி, அந்த படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்.17-ஆம் தேதி தொடங்கி 26-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாணவா் சோ்க்கை தோ்வுக் குழுச் செயலாளா் கிருஷ்ணவேணி கூறியதாவது:

வானிலை மாற்றம் காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு அக்.17-ஆம் தேதி தொடங்க இருந்த கலந்தாய்வு, சென்னை அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் அக்.21-ஆம் தேதி நடைபெறும்.

முதல் நாளில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினா் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொது பிரிவினருக்கான கலந்தாய்வு அக்.22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com