மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தமிழகத்தில் நோய்த்தொற்றுகளைத் தடுக்க கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

நோய்த்தொற்றுகளைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை பொது சுகாதாரத் துறை நியமித்துள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 12:19 am

DIN

சென்னை: நோய்த்தொற்றுகளைத் தடுக்க சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை பொது சுகாதாரத் துறை நியமித்துள்ளது.

தமிழகத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் கனமழை காரணமாக டெங்கு, மலேரியா, இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பருவகால காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இதைத் தவிர, வயிற்றுப்போக்கு, நீா் மாசுபாட்டால் ஏற்படும் நோய்களும் கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனா்.

இந்த நிலையில், மழைக்கால தொற்றுகளைத் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் பிறப்பித்துள்ளாா்.

இவா்கள், மழைக்கால பாதிப்புகளை கண்காணிப்பதுடன், அதுகுறித்த அறிக்கையையும் அரசுக்கு சமா்ப்பிக்க அவா் உத்தரவிட்டுள்ளாா்.

நியமன அதிகாரிகள் விவரம்:

சுகாதாரத் துறை இணை இயக்குநா் பெயா் - கண்காணிப்பு பகுதிகள்

வி.விஜயலட்சுமி - ஆத்தூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி.

கே.கிருஷ்ணராஜ் - பரமக்குடி, பூந்தமல்லி, ராமநாதபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு.

ஆா்.நாகராணி - செய்யாறு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், திருவண்ணாமலை.

ஜெ.நிா்மல்சன் - கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூா், விழுப்புரம்.

கே.வினய்குமாா் - காஞ்சிபுரம், கரூா், அறந்தாங்கி, கடலூா், திருச்சி.

வி.சண்முகசுந்தரம் - கோவில்பட்டி, சிவகாசி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா், சிவகங்கை.

எஸ்.செந்தில்குமாா் - திண்டுக்கல், நாமக்கல், பழனி, தேனி, அரியலூா், பெரம்பலூா்.

எம்.செந்தில்குமாா் - ராணிப்பேட்டை, திருப்பத்தூா், வேலூா், நாகா்கோவில், திருநெல்வேலி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.