சென்னை அருகே நாளை கரையைக் கடக்கிறது புயல் சின்னம்: 4 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு’ எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னை அருகே வியாழக்கிழமை அதிகாலை கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.










