சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள்!
சென்னை விமான நிலையத்திற்கு பள்ளி மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பற்றி...


சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்களை காவல்துறை எச்சரித்து அனுப்பியுள்ளது.
விமான நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு மின்னஞ்சல், தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதும் பின்னர் காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் உடனடியாக அப்பகுதிகளில் சோதனை மேற்கொள்வதும் நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானவை புரளிகளாகவே இருக்கின்றன.
இந்நிலையில் சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி வழியாக தகவல் வந்துள்ளது. பின்னர் காவல்துறையினர், விமான நிலையத்தில் சோதனை செய்ததில் அது தவறான தகவல் என்று தெரியவந்தது.
இதையும் படிக்க | ரேஷன் கார்டில் பெயர் நீக்கமா? இனி இதுதான் நடைமுறை!
பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வந்த மொபைல் எண் கொண்டு விசாரணை நடத்திய காவல்துறையினர், சேலையூர் மற்றும் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் இரு மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...