
சென்னை கோயம்பேடு வணிக வளாகம் தீபாவளியன்று(அக்.31) செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகிற அக். 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து அன்றைய தினம் கோயம்பேடு வணிக வளாகம் வழக்கம்போல் செயல்படும் என்றும் அதற்குப் பதிலாக நவம்பர் 1 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) கோயம்பேடு வணிக வளாகம் முழுமையாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு சிறு மொத்த காய்கறி வியாபார நலச் சங்கத் தலைவர் முத்துக்குமார் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
நவ. 2 ஆம் தேதி முதல் மார்க்கெட் வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.