சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னை - கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

தீபாவளியை முன்னிட்டு சென்னை-கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News image

கோப்புப் படம்.

Din

Updated On :26 அக்டோபர் 2024, 4:03 pm

DIN

தீபாவளியை முன்னிட்டு சென்னை-கன்னியாகுமரி, ஈரோடு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை(அக்.27) 11.25 மணிக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரியில் இருந்து நாளை மறுநாள்(அக்.28) பிற்பகல் 2.45 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல் ஈரோடு-சென்னை சென்ட்ரல் இடையே அக்.30, 31, நவ.3 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

முன்பதிவில்லாத இந்த விரைவு ரயில் ஈரோட்டில் இருந்து காலை 4.55 மணிக்கு புறப்பட்டு அன்றைய தினமே காலை 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.

மறுமார்க்கமாக இந்த ரயில் சென்னை சென்ட்ரலில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு ஈரோடு சென்றடைகிறது.

தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் கூடுதல் நெரிசலை தவிர்க்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.