ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

'நீங்கள் எங்களுடன் இருந்தால்...' - தூய்மைப் பணியாளர்களிடையே உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

தூய்மை பணியாளர்களிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.

News image
Updated On :26 அக்டோபர் 2024, 9:58 am

DIN

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும் என தூய்மை பணியாளர்களிடையே துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் சென்னை கிழக்கு மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் களத்தில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 1,000-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகஸே் குமார், மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் இந்த விழாவின் மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின்,

'கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனைத்து ஊடகங்களிலும் மழை குறித்தான பேச்சுகள்தான் இருந்தது. சென்ற ஆண்டு, ஒரு ஆண்டு பெய்ய வேண்டிய மழை ஒரு நாளில் பெய்தது. இந்தாண்டு முதலமைச்சர், அனைத்துத் துறை அமைச்சர்களை அழைத்து ஆலோசனை மேற்கொண்டார். மழை பெய்தாலும் மூன்று மணி நேரத்திற்குள் தண்ணீரை அகற்ற வேண்டும், எங்கும் தண்ணீர் நிற்கக் கூடாது என உத்தரவிட்டார். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

இதுபோன்ற காலத்தில் நாங்கள் எப்போதும் களத்தில் இருந்துள்ளோம். நீங்கள் இருக்கும் நம்பிக்கையில் நாங்கள் களத்தில் இருக்கிறோம்.

ஒரு குழந்தையை அம்மா காலையில் குளிக்க வைத்து வெளியே அனுப்புவார்கள். ஆனால் அந்த குழந்தை வீட்டிற்கு வரும்போது சேறும், மண்ணுமாக வீட்டிற்கு வரும். அப்போது அந்த குழந்தை மீது அம்மாவிற்கு கோவம் வரும், ஆனால் அது செல்ல கோவம். அதுபோலவே நீங்களும் பணியாற்றுகிறீர்கள். சென்னைதான் அந்த குழந்தை, நீங்கள்தான்(தூய்மை பணியாளர்கள்) அதன் தாய்' என்று தெரிவித்தார்.

மேலும், 'மழை பெய்த 12 மணி நேரத்தில் அதன் சுவடே தெரியாத அளவிற்கு பணியாற்றி உள்ளனர்.

எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சென்னை மக்களை காப்பாற்ற நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் நீங்கள் இருக்க வேண்டும்.

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் ஆகிய உங்களுக்கு மீண்டும் நன்கு பணி செய்ய வேண்டும் என்பதை நினைவு கூறும் வகையில் மொத்தமாக 1280 பேருக்கு நிவாரண பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

புடவை, கைலி, ரெயின்கோட், 5 கிலோ அரிசி, எண்ணெய், பால் பவுடர், மிளகாய் தூள் மற்றும் எதிர்பார்க்காத பரிசு தொகை ( 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை ) இன்று வழங்கப்படுகிறது.

இது முடிவு அல்ல, இதுதான் ஆரம்பம், எப்படிப்பட்ட பெருமழை வந்தாலும் சென்னை மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம், எங்களுடன் களத்தில் நீங்கள் உள்ளீர்கள்' எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.