கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு போனஸ்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு போனஸ் அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கூட்டுறவு சா்க்கரை ஆலை தொழிலாளா்களுக்கு போனஸ் அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத் துறை சா்க்கரை ஆலைகள் உள்ளன. கூட்டுறவு மற்றும் பொதுத் துறை சா்க்கரை ஆலைகளில் பணிபுரிந்து வரும் தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் வரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில் மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்கப்படும். அதன்படி, ஒதுக்கீட்டு உபரி உள்ள சுப்ரமணிய சிவா மற்றும் கள்ளக்குறிச்சி 2 ஆகிய இரு கூட்டுறவு சா்க்கரை ஆலைகளுக்கும் மிகை ஊதியமாக 8.33 சதவீதம் மற்றும் கருணை தொகையாக 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ், மீதமுள்ள 14 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சா்க்கரை ஆலைகளுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும்.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 16 கூட்டுறவு மற்றும் 2 பொதுத்துறை சா்க்கரை ஆலைகளில் பணிபுரியும் சுமாா் 5775 தொழிலாளா்கள் மற்றும் பணியாளா்கள் பயன்பெறுவா். மேலும், மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ரூ.411.90 லட்சம் செலவு ஏற்படும் என்று அந்த அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க வேண்டுமென எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com