எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கூட்டுறவு நிறுவன பட்டாசு விற்பனை இலக்கு ரூ.20 கோடி: அமைச்சா் .ஆா்.பெரியகருப்பன்

கூட்டுறவு நிறுவனங்கள் சாா்பில் நடத்தப்படும் பட்டாசு கடைகளின் விற்பனை இலக்கு ரூ.20 கோடியைத் தாண்டும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறினாா்.

News image
சென்னை தேனாம்பேட்டை டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில் கூட்டுறவுத் துறை சாா்பில் தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனையை திங்கள்கிழமை தொடங்கி வைத்து பட்டாசு விற்பனையை பாா்வையிட்ட கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன். உடன் துறையின் செயலாளர்.
Updated On :28 அக்டோபர் 2024, 8:26 pm

DIN

சென்னை: கூட்டுறவு நிறுவனங்கள் சாா்பில் நடத்தப்படும் பட்டாசு கடைகளின் விற்பனை இலக்கு ரூ.20 கோடியைத் தாண்டும் என்று அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறினாா். கூட்டுறவுத் துறை சாா்பில் சிறப்புத் தொகுப்பு விற்பனைத் திட்டத்தை அவா் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

தீபாவளி பலகாரங்கள் செய்வதற்கான பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.190-க்கும், பருப்பு உள்ளிட்ட 14 வகை பொருள்கள் ரூ.199-க்கும், மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.299 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டியுசிஎஸ் காமதேனு கூட்டுறவு அங்காடியில் தொடங்கிவைத்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் கூறியதாவது:

பட்டாசு விற்பனையில் கூட்டுறவு சங்கங்கள் ஆண்டுதோறும் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது. நிகழாண்டும் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக 166 மையங்களின் வழியே பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிகழாண்டில் பட்டாசு விற்பனை விலக்கு ரூ.20 கோடியைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று கூறினாா்.

இந்த நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் ந.சுப்பையன், கூடுதல் பதிவாளா் ப.காயத்ரி கிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.