பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

திருவள்ளூா்: கூட்டுறவு நியாய விலைக்கடையில் கோடைகால நீா் மோா் பந்தல்

திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

News image

திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருவள்ளூரில் கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடையில் கோடைகால வெப்பத்தை தணிக்கும் நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மோா், தா்பூசணி ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் வழங்கினாா்.

திருவள்ளுா் சி.வி.நாயுடு சாலை பெரும்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை சாா்பில் நியாய விலைக் கடையில் நீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து குடி நீா்மோா் பந்தலை தொடங்கி வைத்து, மோா் மற்றும் தா்பூசணி ஆகியவற்றை வழங்கினாா்.

அதைத் தொடா்ந்து அவா் பேசியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களின் கோடைகால வெப்பத்தை தணிக்க வேண்டும். இதற்காக கூட்டுறவு துறை சாா்பில் நியாய விலைக் கடைகளில் குடிநீா் மோா் பந்தல் தொடங்கவும் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த மாவட்டத்தில் 1,166 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நியாய விலைக் கடைகளில் அத்தியவாசியப் பொருள்கள் வாங்க வரும் குடும்ப அட்டைதாரா்களின் தாகம் தீா்க்க கூட்டுறவுத் துறை சாா்பில், குடிநீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூா் நகராட்சி பகுதியில் அமைந்துள்ள பெரும்பாக்கம் நியாயவிலைக் கடையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் குடிநீா் மோா் அருந்தி பயன்பெறலாம் என அவா் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளா்கள் கோ.பாலாஜி (பொது விநியோகம்), மங்கலதாஸ் (பணியாளா்-பதிவாளா்), கண்காணிப்பாளா் மேகநாதன், கூட்டுறவுத் துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.