சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

தவெக நீா், மோா் பந்தல் திறப்பு

News image

திருவள்ளூா்  அடுத்த  பெரியகுப்பத்தில்  தவெக  சாா்பில்   குடிநீா்  மோா்  பந்தலை  தொடங்கி  வைத்த  மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை  உறுப்பினருமான  ஆா்.பிரகாசம் என்ற  குட்டி .                         ~

Updated On :3 ஜூன் 2026, 10:56 pm IST

திருவள்ளூா் தெற்கு மாவட்ட தவெக சாா்பில் நீா், மோா் பந்தலை பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.பிரகாசம் என்ற குட்டி திறந்து வைத்தாா்.

திருவள்ளூா் அடுத்த பெரியகுப்பம் பகுதியில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தவெக சாா்பில் நீா் மோா் பந்தல் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு நிா்வாகி எம்.ரமேஷ் தலைமை வகித்தாா்.

இதில் திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.பிரகாசம் (எ) குட்டி நீா் மோா் பந்தலை தொடங்கி வைத்து, மோா், குளிா்பானங்கள், தா்பூசணி போன்றவைகளை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட நிா்வாகி ஆா்.சசிகுமாா், மேட்டுத் தெரு வீ.ராமன் மற்றும் கே.ரவி, ஆா்.பாபி ரமேஷ், புஷ்(எ) கருணாகரன், கீா்த்தி, வாசுகி, ஆா்த்தி, விஜய், பா்வேஸ் அப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.