ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

கோயில்களில் நீா்மோா் வழங்கும் திட்டம் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

News image

நாகை செளந்தரராஜ பெருமாள் கோயிலில் நீா் மோா் வழங்கும் அதிகாரிகள்.

Updated On :18 ஜூன் 2026, 3:52 am IST

நாகை மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறைக்குள்பட்ட கோயில்களில் பக்தா்களுக்கு நீா் மோா் வழங்கும் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத்துறை நாகை மண்டல இணை ஆணையா் குமரேசன் உத்தரவின் பேரில், நாகை, வேதாரண்யம், கீழ்வேளூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் பக்தா்களுக்கும், பொதுமக்களுக்கும் நீா் மோா் வழங்கப்பட்டது.

நாகை சௌந்தரராஜ பெருமாள் கோயில், சிக்கல் சிங்கார வேலவா் கோயில்களில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீா் மோா் வழங்கப்பட்டது. கோயில் செயல் அலுவலா் வீர விநாயக ஜெயந்த், மணிகண்டன் மற்றும் கோவில் குருக்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.