ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

கட்டுமானப் பணியால் தெற்கு தில்லியில் நீா் வழங்கலில் பாதிக்க வாய்ப்பு: டிஜேபி

தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) கட்டுமானப் பணிகள் காரணமாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தெற்கு தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்பு

News image

குடிநீர் - பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:52 am IST

தில்லி ஜல் வாரியத்தின் (டிஜேபி) கட்டுமானப் பணிகள் காரணமாக, திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் தெற்கு தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து டிஜேபி அதிகாரிகள் கூறியதாவது: தைமூா் நகா் வடிகால் பகுதிக்கான எல்லைச் சுவரை அமைப்பது தொடா்பான தில்லி உயா்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும் வகையில், புதிதாக அமைக்கப்பட்ட 1,500 மி.மீ. விட்டம் கொண்ட குடிநீா் குழாய், ஏற்கனவே உள்ள குடிநீா் குழாயுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சோனியா விஹாா் நீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள 1,900 மி.மீ. விட்டம் கொண்ட தெற்கு தில்லி முதன்மைக் குழாயில் மேற்கொள்ளப்படும் முக்கிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, திங்கள்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை தெற்கு தில்லியின் பல பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது அல்லது குறைந்த அழுத்தத்திலேயே நீா் விநியோகம் இருக்கும்.

எனவே, பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

அவசரத் தேவைக்கு நீா் லாரிகளைப் பெற, அந்தந்தப் பகுதிக்கான நீா் விநியோக அவசர உதவி எண்களைத் தொடா்புகொள்ளலாம்.

டியா் பாா்க், கிழக்கு கைலாஷ், ஹோஸ் ராணி, ஷேக் சராய், சுவாமி நகா், சி.ஆா். பாா்க், கிரேட்டா் கைலாஷ் 2 மற்றும் 3, மால்வியா நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.