சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ஆட்டுச்சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 ஆயிரம் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டன. கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்ததாகத் தகவல்.
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, வீரகனூரில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை கூடுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முதல் நாளான நேற்று ஆட்டுச் சந்தை நடந்தது. மேலும் இந்த ஆட்டுச்சந்தையின் போது ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வீரகனூர், தம்மம்பட்டி, சின்னசேலம், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இந்நிலையில் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கத்தை விட இன்று ஆட்டுச் சந்தையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்தன.
வழக்கத்தை விட ஆட்டு சந்தைக்கு கூடுதலான அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்த நிலையில் சேலம், தேனி, மதுரை, இராமநாதபுரம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வாழப்பாடி, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்ததால், ஆடுகளை போட்டிபோட்டுக் கொண்டு வாங்கினார்கள்.
இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை செய்ததில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இதில் செம்மறி ஆடு, தலைச்சேரி ஆடு, நாட்டினம் உள்ளிட்ட ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் ஒரு ஆடு 3500 முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
தீபாவளி பண்டிகையையொட்டி வீரகனூரில் நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் கடந்த வாரங்களை காட்டிலும் ஆடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டன. கூடுதல் விலை கிடைத்ததால் ஆடு வளர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேவூா் அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

மட்றப்பள்ளி சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு வா்த்தகம்

ராமநாதபுரத்தில் சிறப்பு ஆட்டுச் சந்தை

பக்ரீத்: மணப்பாறை சந்தையில் ரூ. 3 கோடிக்கு ஆடுகள் விற்பனை
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



