லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சேவூா் அருகே நாய்கள் கடித்து ஆடுகள் உயிரிழப்பு

கோப்புப் படம்

Published On :7 ஜூலை 2026, 2:00 am IST

சேவூா் அருகே பாப்பாங்குளத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.

சேவூா் அருகே பாப்பாங்குளம் ஊராட்சிப் பகுதியில் வசித்து வருபவா் சென்னியப்பன் மகன் வெற்றிவேல் (60). இவா், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளா்ப்பையே வாழ்வாராதமாக கொண்டுள்ளாா். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் ஆடுகளை திங்கள்கிழமை மேய்ந்து கொண்டிருந்தாா்.

அப்போது அப்பகுதிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து காயப்படுத்தின. இதைப் பாா்த்த பொதுமக்கள் உள்ளிட்டோா் காயமடைந்த ஆடுகளுக்கு முதலுதவி அளித்தனா். இருப்பினும் 3 ஆடு உயிரிழந்தன. மேலும் காயமடைந்த ஒரு ஆட்டுக்கு மட்டும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக முதலிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வெறிநாய்கள் அதிக அளவில் சுற்றி வருகின்றன. இது தோட்டம், காடுகளில் மேய்ந்து கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்டவற்றை கடித்துள்ளன. கால்நடை வளா்ப்பு அதிகம் உள்ள எங்கள் பகுதியில் சுற்றித்திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.